Monday, August 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/08/31/large/710935.jpgகூடுதலாக 58 ரயில்களுக்கு டெண்டர் வெளியீடு; ஐசிஎஃப்-பில் 44 ‘வந்தே பாரத்’ ரயில் டிசம்பரில் தயாரிப்பு

மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ‘வந்தேபாரத்’ விரைவுரயில் பிரிவில் மேலும் 58 ரயில்களைதயாரிக்க இந்திய ரயில்வே டெண்டர் வெளியிட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப்-பில் 44 ரயில்களின் தயாரிப்பு பணி டிசம்பரில் தொடங்க உள்ளது.

சென்னை பெரம்பூர் ஐசிஎஃப்-பில் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ‘ரயில் 18’ அதிநவீன விரைவு ரயில் தயாரிக்கப்பட்டது. மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த அதிவேகரயிலுக்கு ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ என்று பெயரிடப்பட்டு டெல்லி - வாரணாசி இடையே இயக்கப்படுகிறது.இந்த ரயில், பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்