
விநாயகர் சிலைகளை விற்பனை செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தக் கோரி சிலை தயாரிப்பாளர்கள், சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் கலைவாணர் அரங்கம் முன்பு நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா, வரும்10-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. கரோனா வைரஸ் பரவலை கருத்தில்கொண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாடவும், ஊர்வலமாக சென்று சிலைகளை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்