
களியக்காவிளை மற்றும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடிகளில் கணக்கில் வராத ரூ.14,600 பறிமுதல் செய்யப்பட்டது.
கேரள எல்லையில் உள்ளகளியக்காவிளை சோதனைச்சாவடி, திருநெல்வேலி மாவட்டஎல்லையில் உள்ள ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி ஆகியவற்றின் வழியாக, கனிம வளங்கள் மற்றும் ரேஷன்பொருட்கள் கடத்துவது அதிகரித்துள்ளது. இதற்குசோதனைச்சாவடிகளில் பணியாற்றும் போலீஸாரே உடந்தையாக இருப்பதாக புகார் எழுந்தது. சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தபோதிலும், அவற்றில் சிக்காமல் வாகன ஓட்டுநர்களிடம் லஞ்சம் பெற்று வருவதாக உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்