
பள்ளிக்கரணையில் உள்ள டாக்டர்காமாட்சி நினைவு மருத்துவமனையில் இதுவரை 350-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச இதயமருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இலவச சேவையை மேற்கொள்ள ‘பிஞ்சு இதயங்களைக் குணப்படுத்துவோம்’ என்ற திட்டத்தை நடத்திவரும் ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் டெம்பிள் சிட்டியுடன் இம்மருத்துவமனை கைகோர்த்துள்ளது.
இந்த கூட்டிணைவின் தொடக்க விழா, சர்வதேச இதய நாள் விழிப்புணர்வு தினமான நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் அர்விந்த் ரமேஷ், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் ஜெ.ஸ்ரீதர் ஆகியோர் பங்கேற்றனர். இதுவரை இலவச இதய சிகிச்சை பெற்ற ஏழைக் குழந்தைகளுக்கு இலவச மறு ஆய்வுகள் இந்நிகழ்வின்போது மேற்கொள்ளப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்