
உள்ளாட்சி தேர்தலில் வாக்குச்சாவடி மைய முகவர்களுக்கு தடுப்பூசி சான்று கட்டாயமாக்கப்படும் என்று கருதப்படுவதால், முகவர்களாக பணியாற்ற உள்ளவர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.
காஞ்சி, செங்கல்பட்டு மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கிராமப்பகுதிகளில் இலக்கு நிர்ணயித்து, கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்