Tuesday, September 28, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/09/29/large/721016.jpgகொடைக்கானல் மலை கிராமங்களில் உலாவரும் காட்டு யானைகள்: வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு

கொடைக்கானல் அருகே உள்ளபேத்துப்பாறை, பாரதி அண்ணா நகர், அஞ்சுரான் மந்தை, அஞ்சுவீடுஉள்ளிட்ட மலை கிராமப் பகுதிகளில் சில மாதங்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

இவை, விளைநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் பேத்துப்பாறை மலை கிராமப் பகுதியில் பகலிலேயே 2 காட்டு யானைகள் உலாவந்ததால் கிராம மக்கள் அச்சம்அடைந்தனர். வீடுகளை விட்டுவெளியே வரமுடியாமல் தவித்தனர். காட்டு யானைகள் அருகேஉள்ள தோட்டப் பகுதிக்குச் சென்று விளைந்திருந்த பயிர்களை சேதப்படுத்தின.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்