Friday, October 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/30/large/732146.jpgதிமுக மேலிடத்தின் நெருக்கடியால் கடையம் ஒன்றியக்குழு தலைவர் ராஜினாமா

கட்சி மேலிடத்தின் நெருக்கடி காரணமாக கடையம் ஒன்றியக் குழு தலைவர் செல்லம்மாள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 17 வார்டுகள் உள்ளன. இதில், திமுக சார்பில் 11 பேர், அதிமுக சார்பில் 5 பேர், காங்கிரஸ் சார்பில் ஒருவர் வெற்றிபெற்றனர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு நடந்த மறைமுகத் தேர்தலில் 10-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த செல்லம்மாள் 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட 13-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ஜெயக்குமார் 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்