Saturday, October 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/10/31/large/732616.jpgகோயம்பேடு, வேளச்சேரி மேம்பாலங்களை முதல்வர் ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

சென்னையில் வேளச்சேரி மற்றும் கோயம்பேடு மேம்பாலங்களைக் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அவற்றை திறந்து வைக்கவுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ரூ.146 கோடி செலவில் மேடவாக்கம் - சோழிங்கநல்லூர் சாலை சந்திப்பில் மேம்பாலம், ரூ.108 கோடி செலவில் வேளச்சேரி விஜயநகர் மேம்பாலம், ரூ.93 கோடியில் கோயம்பேடு காளியம்மன் கோயில் மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்