
மத்திய அரசின் ‘சமித்துவா’ திட்டத்தின் கீழ், ஆளில்லா விமானம் மூலம் டிஜிட்டல் சர்வே முறையில் மனைகள், வீடுகளுக்கு துல்லிய நில வரைப்படம் தயாரிக்கும் பணி புதுச்சேரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சொத்து அடையாள அட்டை தரும் ஆயத்த பணிகளும் தொடங்கப்பட உள்ளது.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘சமித்துவா’ என்கிற திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புற பகுதிகள் வான்வழியே சர்வே செய்யப்பட்டு மனைகள், வீடுகளுக்கு துல்லியமான வரைப்படம் பெறப்பட உள்ளது. இதுமட்டுமின்றி சொத்து அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்