Wednesday, December 29, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/30/large/752089.jpgவந்தவாசி அருகே நம்பேடு ஊராட்சியில் கடந்த 2012 முதல் 2020 வரை 100 நாள் வேலை திட்டத்தில் ரூ.31 லட்சம் முறைகேடு: ஊராட்சி செயலாளர்கள், தலைவர் உட்பட 11 பேர் மீது வழக்கு

வந்தவாசி அருகே நம்பேடு கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கியதில் ரூ.31 லட்சம் அளவுக்கு நடைபெற்றுள்ள முறைகேடு புகாரில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகேயுள்ள நம்பேடு கிராம ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் செய் துள்ளதாக அதே கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். அவர் அளித்த புகாரின்பேரில், திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு காவல்துறையினர் கடந்த 2012 முதல் 2020 வரை நடைபெற்ற பணிகள், சம்பளம் வழங்கியது மற்றும் பயனாளிகள் குறித்த விவரங்களை ஆய்வு செய்தனர். இதில், அரசின் நிதியை ரூ.31 லட்சத்து 21 ஆயிரத்து 207 அளவுக்கு முறைகேடுகள் செய்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்