Thursday, December 30, 2021

https://static.hindutamil.in/hindu/uploads/news/2021/12/31/large/752574.jpgசென்னையில் இன்று நள்ளிரவு 12 முதல் காலை 5 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை

சென்னையில் ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாட காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இன்று (டிசம்பர் 31) இரவு சென்னையில் வெளியிடங்களில் பொதுமக்கள் ஒன்றுகூடக் கூடாது. ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், மாநாட்டு அரங்குகள், கிளப்புகள் போன்றவற்றில் வர்த்தக ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதியுடைய உணவகங்கள் இரவு 11.00 மணி வரை செயல்படலாம். அதேசமயம், ஹோட்டல், கேளிக்கை விடுதி, பண்ணை வீடு உள்ளிட்ட இடங்களில் கேளிக்கை, நடனம், இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்