
சேலத்தில் முழுவதும் பெண்களால் நடத்தப்படும் வீரபாண்டி களஞ்சிய ஜீவித உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநரிடம் பிரதமர் மோடி காணொலி மூலம் இன்று கலந்துரையாடுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, விவசாயிகளுக்கான பிரதமர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10-வது தவணை வழங்குதல், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியத்தை வழங்குதல் உள்ளிட்டவற்றை இன்று (1-ம் தேதி) வழங்குகிறார்.இதனையொட்டி, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களைச் சார்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலிக் காட்சிவாயிலாக, கலந்துரையாடுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்