
‘தமிழ் மண்ணில் என் ரத்தம் கலந்திருக்கிறது. அதனால், என்னை தமிழன் என உணர்ந்தேன்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார். மூவாயிரம் ஆண்டு பாரம்பரியமிக்க தமிழகத்தின் மீது யாராலும் எதையும் திணிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனது வரலாற்று நூலின் முதல் பாகத்தை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு திமுக பொருளாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமை வகித்தார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலைவகித்தார். கட்சியின் மகளிரணி செயலாளர் கனிமொழி அனைவரையும் வரவேற்று பேசினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்