
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மயானக்கொள்ளை திருவிழா பாதுாகாப்பு பணியில் 1,100 காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும், வேலூர் மாநகரில் இன்று காலை 11 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மயானக்கொள்ளை திருவிழா இன்று கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட பாலாற்றங்கரை பகுதியில் விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள், வருவாய், மின்துறை, தீயணைப்பு, சுகாதாரத் துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆயத்த கூட்டமும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்