
சென்னை: சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை விரைவாகத் தொடங்கி, குறுகிய காலத்துக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியத்துக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழுதிவாக்கம் சித்தேரி ஏரியில் கழிவுநீர் கலப்பதால், அந்த ஏரியின் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் செய்தி வெளியானது. அதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து, வழக்காகப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்