Monday, May 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/05/24/large/804008.jpgவரும் 26-ம் தமிழகத்தில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் - பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீஸார்

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்தில் சீரமைத்தல், தாம்பரம் - செங்கல்பட்டு 3-வது ரயில்பாதை, மதுரை- தேனி அகல ரயில்பாதை மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்டவற்றை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 26-ம் தேதி சென்னை வருகிறார்.

அவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்