
மதுரை: மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக மதுரை நாடாளுமன்ற எம்பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் நான்காண்டுகால அக்னி பாதை திட்டத்தை கைவிட வேண்டும், மதுரை - உத்தரப் பிரதேசம் பிரக்யாநகருக்கு தனியார் ரயில் சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை நகர், புறநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏராளமானோர் வியாழக்கிழமை ரயில் மறியல் நடத்தத் திட்டமிட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்