
சென்னை: கரோனா காலத்தில் ரத்து செய்யப்பட்டிருந்த 34 ரயில்களை மீண்டும் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் - திருநெல்வேலி(06405/06409), மதுரை - செங்கோட்டை (06663/06664), திருநெல்வேலி - செங்கோட்டை(06681/06658), செங்கோட்டை - திருநெல்வேலி (06684/06687) ஆகிய முன்பதிவில்லா ரயில்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்