
தூத்துக்குடி/சென்னை/புதுடெல்லி: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் 30 பேர் உள்ளிட்ட 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1,382 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தினமும் 10-க்கும் குறைவானவர்களுக்கே கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்