Thursday, June 30, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/06/30/large/820261.jpg'மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்ட மாநில அரசுக்கு பாதுகாப்பில்லை' - யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு

சென்னை: ''மதச்சார்பின்மை மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அரசுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பில்லை'' என்று குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸின் முன்னாள் மூத்த தலைவருமான யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுத் தாக்கலை சில நாட்கள் முன் செய்தவர், இப்போது ஓவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று அரசியல் தலைவர்களைச் சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார். இன்று சென்னை வந்த அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவர்களின் கூட்டணி கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த யஷ்வந்த் சின்ஹா, "இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தும், இந்த கூட்டத்தின் மூலம், நமக்கு ஆதரவளிக்கக்கூடிய மற்ற அரசியல் கட்சியினரையும் பார்ப்பதற்கும் ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினருக்கு எனது நன்றி. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏறக்குறைய நமக்கு இங்குள்ள கட்சியினரிடம் 63 ஆயிரம் ஓட்டுகள் உள்ளதாக முதல்வர் அறிவித்தார். மேலும் ஒரு மாநில அரசு கவிழ்க்கப்பட்டுள்ளது. பாஜக, மகாராஷ்டிராவில் சிவசேனா எதிர்ப்பு எம்எல்ஏக்களுக்கு ஆதரவளிக்கப் போகிறது. பாஜகவின் தலைவர் அங்கு மாநில முதல்வராக வரவில்லை. ஏனென்றால், இந்த அரசு தோற்காது என்று அவருக்கு தெரியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்