
திருப்பூர்: திருப்பூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப் பூவை, பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.
திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் வசிப்பவர் அஸ்வின்.இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், இரவில் மலரும்பிரம்ம கமலப் பூ நேற்று முன்தினம்இரவு மலர்ந்தது. இது 3 விதமானஇதழ்களைக் கொண்டு வெண்மையான நிறத்தில் அழகாக காணப்பட்டது. பொதுவாக இந்த மலர் ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து,சில மணி நேரங்களில் குவிந்துவிடும். இந்த பூவை, ‘நிஷாகந்தி’ என்றும் அழைப்பர். இந்த அபூர்வ வகை பூவை, அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான குழந்தைகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்