
சென்னை: காவல் துறை அலுவலக பயன்பாட்டுக்கான வாகனங்களில் மட்டுமே ‘போலீஸ்’ ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். காவலர்கள் தங்கள் தனிப்பட்டவாகனங்களில் அவ்வாறு ஒட்டியிருந்தால் உடனே அதை அகற்றவேண்டும் என்று டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 14-ம் தேதி ஒரு வழக்கில் சில உத்தரவுகளை பிறப்பித்தது. ‘காவல் துறை உயர் அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களின் கண்ணாடிகளிலும் கருப்பு ஃபிலிம் ஒட்டக் கூடாது. காவலர்கள் தங்கள் தனிப்பட்ட வாகனத்தில் ‘போலீஸ்’ என்ற போர்டு மற்றும் ஸ்டிக்கரை பயன்படுத்தக் கூடாது’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்