
ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூரில் நேற்று இரவு (ஆக்.31) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மின் கடத்தி மீது சப்பரம் மோதியதில் 2 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சொக்கநாதன்ம் புத்தூர் பகுதியில் பேருந்து நிலையம் அருகே குலாலர் தெருவில் விநாயகர் சதுர்த்தி சப்பர ஊர்வலம் நேற்று இரவு நடைபெற்றது. ஊர்வலத்தில் சிறியவர்கள், பெரியவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்