
சென்னை: போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு பலமடங்கு உயர்த்தியுள்ளது. இந்தக் கட்டண உயர்வு இம்மாத இறுதியில் அமலாகும் எனக் கூறப்படுகிறது.
தமிழக உள்துறையின்கீழ் செயல்பட்டு வரும் போக்குவரத்துத் துறை, உரிமம் வழங்குதல், வாகனப் பதிவு, பதிவு புதுப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், தகுதிச்சான்று வழங்குதல், மோட்டார் வாகன வரி, பசுமை வரி உள்ளிட்டவற்றின் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. கடந்த ஆண்டில் இந்த வகையில் அரசுக்கு ரூ.5,272 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்