
தமிழகத்தில் திமுக நிர்வாகரீதியிலான 72 மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மனுதாக்கல் கடந்த 22-ம்தேதி தொடங்கியது. முதல் நாளில் 19 மாவட்டங்களுக்கும், 2-வது நாளில் 21 மாவட்டங்களுக்கும் மனுக்கள் பெறப்பட்டன.
3-வது நாளான நேற்று புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை தெற்கு, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை மத்திய, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் மத்திய ஆகிய 16 மாவட்டங்களுக்கான வேட்பு மனு தாக்கல் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்