Friday, September 23, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/24/large/872515.jpgதலைமைச் செயலக சங்க தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

சென்னை: தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நேற்றுமாலையுடன் முடிந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

இதில், ஓட்டுநர்கள், சட்டப்பேரவைநிருபர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் மாநிலஅளவில் முக்கியமான சங்கம் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கமாகும்.இந்த சங்கத்தின் தற்போதைய தலைவராக பீட்டர் அந்தோணிசாமி உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்