Sunday, September 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/09/26/large/873722.jpgஆட்டோ தொழிற்சங்கத்தினர் போக்குவரத்து அமைச்சருடன் சந்திப்பு: முன்பதிவு செயலியை விரைந்து தொடங்க வலியுறுத்தல்

சென்னை: ஆட்டோ முன்பதிவு செயலியை அரசு சார்பில் விரைந்து தொடங்கவேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம், ஆட்டோ தொழிற்சங்கத்தினர் நேரில் வலியுறுத்தினர். சென்னை, பல்லவன் இல்லத்தில் உள்ள போக்குவரத்துத் துறை அமைச்சரின் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கரை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று முன்தினம் சந்தித்தனர்.

சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், தொமுச பொதுச் செயலாளர் எம்.சண்மும்எம்பி., பொருளாளர் கி.நடராஜன்ஆகியோர் தலைமையில் இந்தச்சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஆட்டோ ஓட்டுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீட்டர் கட்டண உயர்வு, அரசு சார்பில்ஆட்டோ முன்பதிவு செயலி தொடங்குதல் உள்ளிட்டவை தொடர்பான கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்