
புதுச்சேரி: புதுச்சேரியில் மனுதர்மம் எதிர்ப்பு போராட்டத்தின்போது பெரியார் திராவிடர் கழகத்தினருக்கும், இந்து முன்னணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனிடையே மத்திய அரசைக் கண்டித்து, பெரியாரிய-அம்பேத்கரிய இயக்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் 26-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேபோல் ஆ.ராசா மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி சார்பிலும் 27-ம் தேதி முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பந்த் போராட்டம் தொடர்பாக, புதுச்சேரி மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூட்டம், புதுச்சேரி தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்