
தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற முதற்கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்தாண்டு அக்டோபரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணி தொடங்கியது. இப்பணி 3 இடங்களில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம், தங்கம், மண்பாண்டம் உட்பட பல பொருட்கள் கிடைத்தன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்