Friday, November 25, 2022

https://ift.tt/4x9arR8 மாவட்ட சிறைகளில் சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் 12 மாவட்ட சிறைகளில், ரூ.2.51 கோடியில் கட்டப்பட்டுள்ள சோதனை அடையாள அணிவகுப்பு அறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: குற்றம் செய்து, சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவாசிகள் மீதான குற்றத்தை சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கும் வகையில், சோதனை அணிவகுப்பு நடத்தப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை அடையாளம் காட்ட, மத்திய சிறைகளில், நீதித் துறை நடுவர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஒரு பகுதியிலும், அவர்களை குற்றவாளிகள் அடையாளம் காணாத வகையில் மற்றொரு பகுதியிலும் இருக்கும் வகையில் ஒருவழிக் கண்ணாடி தடுப்புடன் கூடிய தனி அறைகள் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச் சிறைகளில் இதுபோன்ற கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்