
சென்னை: மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னையில் விவசாயிகள் சங்கத்தினர் பேரணி நடத்தினர்.
விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சென்னையில் ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணி அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு அனுமதி இல்லாததால், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங்கில் இருந்து ராஜா முத்தையா மன்றம் வரை பேரணி நடந்தது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்