
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில் வாசக்டமி இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்த விழா நேற்று தொடங்கி டிச.4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை (இஎஸ்ஐ), மேம்படுத்தப்பட்ட அரசு வட்டார சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களால் வாசக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்