Friday, November 25, 2022

https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/11/26/large/903711.jpg7.5% உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள்: 582 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு

சென்னை: மருத்துவப் படிப்புக்கான இரண்டு கட்ட கலந்தாய்வு முடிவில் அரசு ஒதுக்கீட்டுக்கான அனைத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களும் நிரம்பியுள்ளன. 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 582 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புக் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற்றது. நேரடியாக நடந்த மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் 65 இடங்களும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் 565 இடங்களும் நிரப்பப்பட்டன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்