
புதுடெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்கக் கோரி இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பாக 30-ம் தேதி மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எழுந்த பிரச்சினையில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு, தற்போது தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்