
சென்னை: தமிழகம் முழுவதும் 45 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 27 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறைச் செயலர் க.பணீந்திரரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: எஸ்.பி. நிலையில் இருந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பி.அரவிந்தன், வி.விக்ரமன், சஞ்சய் குமார் தாகூர், டி.மகேஷ் குமார், தேவராணி, இ.எஸ்.உமா, ஆர்.திருநாவுக்கரசு, ஆர்.ஜெயந்தி, ஜி.ராமர் ஆகிய 9 பேர், தேர்வு தர நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்