Saturday, February 25, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/26/large/951550.jpgஈரோடு கிழக்கில் நாளை வாக்குப்பதிவு - தீவிரமாக நடந்த பிரச்சாரம் ஓய்ந்தது

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், நாளை (27-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. ஈரோட்டில் நேற்று பிரச்சாரம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டார். இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானதை அடுத்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, நாளை (27-ம்தேதி) வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் உட்பட 77 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்