Sunday, February 19, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/20/large/946850.jpgகிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை: திமுகவை கண்டித்து நாளை பாஜக உண்ணாவிரத போராட்டம்

கிருஷ்ணகிரி: ராணுவ வீரரை கொலை செய்த திமுக நிர்வாகியை கண்டித்து நாளை தமிழக பாஜக சார்பில் சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை: திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள்விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். பாஜக பட்டியலினப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமி இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்