Sunday, February 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/27/large/952045.jpgதமிழகத்தில் பால் தட்டுப்பாடு இல்லை: ஆவின் நிர்வாகம் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஆவின் பால் தட்டுப்பாடு இல்லை என்று ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது பால் கொள்முதல் 29.50 லட்சம் லிட்டர் முதல் 30 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளது. இது சில்லறை விற்பனைக்கே போதுமானதாக இல்லாததால், வெண்ணெய், பால் பவுடர், நெய் உள்ளிட்ட பால் உப பொருட்கள் தயாரிப்பு குறைந்துள்ளது.

வெளி மாநிலங்களிலும் பால் பற்றாக்குறை நிலவுவதால், அங்கும் வெண்ணெய் தயாரிப்பு குறைந்துள்ளது. இதையடுத்து, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விற்பனை இணையதளம் வாயிலாக, வெளி மாநிலங்களில் இருந்து வெண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்