Monday, February 20, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/02/21/large/947218.jpgமகா சிவராத்திரி விழாவின்போது அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொடுத்த பால் பாக்கெட்களை குப்பையில் வீசிய கோயில் நிர்வாகம்

சென்னை: வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்தி நாளன்று அபிஷேகத்துக்காக பக்தர்கள் கொடுத்த பால் பாக்கெட்களை கோயில் நிர்வாகம் குப்பைத்தொட்டியில் வீசியது பக்தர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில், 500 ஆண்டுகள் பழமையானது. அங்கு கடந்த18-ம் தேதி நடந்த மகா சிவராத்திரி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். அன்றிரவு தொடங்கி விடிய விடிய 4 காலபூஜை நடந்தது. 4 கால பூஜையிலும் சுவாமிக்கு அனைத்துவித அபிஷேகங்களும் செய்யப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்