
சென்னை: கலாஷேத்ரா அறக்கட்டளை விவகாரத்தில் குற்றச்சாட்டு உறுதியானால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தில் கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் போராட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), அருள் (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), தி.வேல் முருகன்(தவாக) ஆகியோர் சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்