
சென்னை: தமிழகத்தில் பெரியார் வனவிலங்கு சரணாலயம்’ என்னும் புதிய சரணாலயத்தை அரசு ஏற்படுத்தும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது:
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் கடலோர சுற்றுச்சூழலும், கடலோர மக்களின் வாழ்வாதாரமும் வருங்காலங்களில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும். கடல் அரிப்பை தடுக்கவும், கடல் மாசுபாட்டை குறைக்கவும், கடல்சார் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாக்கவும் ‘தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்’ என்ற திட்டத்தை ரூ.2 ஆயிரம் கோடியில் உலக வங்கி நிதி உதவியுடன், அடுத்த 5 ஆண்டுகளில் இந்த அரசு செயல்படுத்த உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்