
திருப்போரூர்: திருப்போரூர் கோயில் அமைக்கப்பட்டு 390 ஆண்டு வரலாற்றில் முதன்முறையாக ஆதிதிராவிடர் பகுதிக்குள் உற்சவர் கந்தசுவாமி வீதி உலா வந்தார். அப்போது பட்டாசு வெடித்து, பூக்களைத் தூவி கந்தசுவாமியை அப்பகுதி மக்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முத்துக் குமாரசாமி உற்சவர் வீதி உலா பரிவேட்டை நடத்துவதற்காக ஆலத்தூர், தண்டலம் கிராமங்களுக்குச் செல்வது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்