
சென்னை: சென்னை மெட்ரோ ரயில்களில் தினமும் சராசரியாக 2.45 லட்சம்பேர் பயணம் செய்கின்றனர். அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மெட்ரோ ரயில் நிலையங்களில் 41 நகரும் படிக்கட்டுகளைக் கூடுதலாக நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, சென்ட்ரல் மெட்ரோரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும்படிக்கட்டுகள் பொதுத்தளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்றுவர நேற்று திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்