
சென்னை: இலங்கை இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாகவும், சுற்றுலாப் பயணிகள் கவலையின்றி வரலாம் எனவும் இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கை நாட்டுக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக ‘இலங்கைக்கு வாருங்கள்’ என்ற திட்டத்தை தென் இந்தியாவில் ஊக்கப்படுத்தும் வகையில், சென்னையில் நேற்று வர்த்தகர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில், இலங்கையில் இருந்து வந்து பங்கேற்ற 50-க்கும் மேற்பட்ட முகவர்கள், அங்குள்ள சுற்றுலாத் திட்டங்கள், சிறப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்