Sunday, April 23, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/23/large/980515.jpgமதுரை மக்களை குளிர்வித்த கோடை மழை

மதுரை: மதுரையில் கோடை வெயில் வாட்டி வதைக்கும் சூழலில், அடுத்தடுத்து பெய்த மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

ஒவ்வொரு நாளும் கோடை வெயிலின் தாக்கம், மக்களை வெளியில் போகவிடாமல் அச்சம் ஏற்படுத்தும் விதமாக வாட்டுகிறது. அக்னி நட்த்திரம் தொடங்கும் முன்பே சுட்டெரிக்கும் இந்த வெயிலைக் கண்டு பகலில் எங்காவது ஒதுங்கவேண்டும் என தோன்றுகிறது. வயதானோர் உள்ளிட்ட சிலர் வெளியில் செல்வதையே தவிர்க்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்