Wednesday, April 26, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/26/large/981895.jpgபடம் நா. தங்கரத்தினம்

மதுரை: மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய கைதிகள் செய்பொருட்கள் விற்பனை அங்காடியை டிஜிபி அம்ரேஷ்பூசாரி திறந்து வைத்தார்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூசாரி பொறுப்பேற்ற பின், சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சிறை செய்பொருட்கள் விற்பனை அங்காடி, விவசாயிகளுக்கு உதவும் மண் பரிசோதனை கருவிகளை கைதிகள் தயாரிக்கும் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்