
சென்னை: திருச்சியில் வரும் 24-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. மேலும், கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக இன்று மாயையில் சிக்கி இருக்கிறது. பொதுக்குழு சரியில்லை என்று நீதிமன்றம் சென்றோம். உயர் நீதிமன்ற அமர்வு, பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்