
திருச்சி: அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி அதிமுக நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
ஓபிஎஸ் அணி சார்பில் திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் ஏப்.24-ம் தேதி மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநாட்டு திடல் பகுதி முழுவதும் அதிமுக கொடிகள் கட்டப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்