Wednesday, May 24, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/05/25/large/995882.jpgசி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாள்: தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை

சென்னை: தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனார் 42-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினத்தந்தி நாளிதழ் நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 42-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கியப் பிரமுகர்கள், வணிகர்கள், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நாடார் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்