
சென்னை: கடந்த ஆண்டில் ஓய்வுபெற்ற 612 போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ரூ.171.23 கோடி பணப் பலன்களுக்கான காசோலையை விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வுபெற்ற, காலமான பணியாளர்களின் வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப் பலன்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்